கொடுமுடியில் 3 பேர் ....
கொடுமுடி ஏமகண்டனூரைச்சேர்ந்தவர் லட்சுமி(71) இவர் தனது வீட்டில் சமையல்
செய்துகொண்டிருந்தபோது சேலையில் தீ பிடித்து தீ காயம் பட்டார்.
ஈரோடு அரசு மருத்துவமனையில் இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை
பயனின்றி இறந்தார். சம்பவம் குறித்து கொடுமுடி போலிசார் விசாரிக்கின்றனர்.
அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மற்றொரு
பெண் பலியானார். சம்பவத்தன்று இரவு கொடுமுடி அருகே உள்ள அரசம்பாளையம்
ரோட்டில் 70 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பிரேதமாக கிடந்தார். அடையாளம்
தெரியாத வாகனம் மோதியதில் பலியாகி இருப்பது தெரியவந்தது. அவர் யார் என்பது
தெரியவில்லை சம்பவம் குறித்து போலிசார் விசாரிக்கின்றனர்.
கொடுமுடி அருகே உள்ள கொல்லம்புதுப்பாளையம் காலிங்கராயன்
கால்வாயில் 60 வயது மதிக்கத்தக்க ஒரு உடல் மிதந்துகொண்டிருந்தது.
சிதிலமடைந்த நிலையில் இருந்த அந்த பிரேதத்தை கைப்பற்றிய போலிசார்
மேற்கொண்டு விசாரிக்கின்றனர்.