கொடுமுடி யூனியன் சேர்மன் தேர்தல் நேற்று விறுவிறுப்பாக
வியாழன், 1 டிசம்பர், 2011
திங்கள், 28 நவம்பர், 2011
ஒடையின் பாலம்..
ஈரோடு மாவட்டம் சிவகிரியிலிருந்து வேட்டுவபாளையம்,நம்மகவுண்டம்பாளையம், வாழைத்தோட்டம், காரவலசு உள்ளிட்ட ஊர்களின் வழியாக கொடுமுடி முத்தூர் சாலையை சந்திக்க செல்லும் இந்த முக்கிய ரோட்டில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வாகனங்களில் சென்றுவருகின்றனர்.
இப்படி வாகனங்களில் செல்வோருக்கு அச்சுறுத்தலாய்… எவ்வித தடுப்புமின்றி அமைந்துள்ளது வேலாயுதஸ்வாமி ரைஸ்மில் எதிரில் அமைந்துள்ள இந்த கசிவுநீர் ஒடையின் பாலம்… உரியவர்கள் இந்த அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாமே?
ஞாயிறு, 27 நவம்பர், 2011
உற்சவர் சம்ப்ரோஷ்ண விழா
சிவகிரி திரு.வி.க தெருவில் உள்ள ஸ்ரீவிஜயலட்சுமி தாயார் சமேத கல்யாண வெங்கடேசப்பெருமாள் கோயிலுக்கு புதிய உற்சவர் திருமேனி செய்யப்பட்டுள்ளது.
இந்த திருமேனிக்கான சம்ப்ரோஷ்ண விழா நேற்று கோயிலில் நடந்தது. காலை 9 மணிக்கு நடந்த சம்ரோஷ்ண விழாவில் ப்ராணபிரதிஷ்டையும், புருஷ்ஸீக்த, ஸ்ரீ ஸீக்ரத, சுதர்ஸன, சகஸ்ரநாம, ஸரனாகதி சத்ய ஹோமங்கள் நடைபெற்றன.
இதனை அடுத்து சுவாமிக்கு திருமஞ்சனமும், அதனை அடுத்து மஹாதீபாரதனையும் நடந்தன. விழாவில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)