இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைபுலிகளுக்கும் போர் நடந்த காலத்தில்
லயன் ஏர் என்ற விமானம் புலிகளினால் சுட்டுவீழ்த்தப்பட்டது.
சுட்டுவீழ்த்தப்பட்ட விமானம் குறித்த செய்தியை தற்போது இலங்கை அரசினால்
கைது செய்யப்பட்டிருக்கும் புலிகளில் ஒருவர் விசாரணையின்போது
தெரிவித்திருக்கிறார்.
இந்த தகவலின் பேரில் இலங்கை அரசு புலிகளின் தாக்குதலுக்குள்ளாகி
கடலுக்குள் கிடந்த விமானத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டது.
அப்போது விமானத்தின் முக்கிய உறுப்புகளில் ஒன்றாக கருதப்படும்
விமானிகளின் நடவடிக்கைகள் குறித்து பதிவு செய்யும் கருவியான கருப்பு
பெட்டி புலிகளின் கடற்படை பிரிவினால் அகற்றப்பட்டுள்ளது தெரிய
வந்துள்ளது