சிவகிரி அருகே கொந்தளம் கிராமத்துக்கு செல்லும் வழியில் இருந்த ரைஸ்மில்லில் லாரி புகுந்து
சனி, 26 நவம்பர், 2011
வெள்ளி, 25 நவம்பர், 2011
தேவை...
ஐ.எஸ்.ஓ தரத்துக்கு இணையாக செயல்பட்டுவரும் அரசு மருத்துவ மனைக்கு பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளதால் பொதுமக்கள்
உயிர்ப்பலி ...
கொடுமுடி யூனியனில் உள்ள கிளாம்பாடி பஞ்சாயத்தில் உள்ள காளிங்கராயன் கால்வாயின் வெள்ளத்தடுப்பு மதகுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட நீர்
செவ்வாய், 22 நவம்பர், 2011
நன்றி தெரிவிப்பு...
ஈரோடு மாவட்ட ஊராட்சிக்குழுவின் 19வது வார்டு உறுப்பினர் தேவகிசேகர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
கொடுமுடி மற்றும் மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட மாவட்ட ஊராட்சி வார்டாக 19 வார்டு உள்ளது. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் இந்த வார்டுக்கு அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டவர் தேவகி சேகர். மொடக்குறிச்சி தொகுதி கழக இணை செயலாளராக உள்ள அமராவதிபுதூர்சேகரின் மனைவியான இவர் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றார்.
இதனை அடுத்து தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சென்று நன்றி தெரிவித்து வருகிறார். கொடுமுடி யூனியனில் உள்ள அய்யம்பாளையம் பகுதியில் நன்றி தெரிவித்தார். அவருடன் மொடக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க இணை செயலாளர் அமராவதிபுதூர் சேகர் மற்றும் கொடுமுடி ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பழனிசாமி, அய்யம்பாளையம் ஊராட்சி தலைவர் குப்புச்சாமி ஆகியோர் வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்தனர்.
திங்கள், 21 நவம்பர், 2011
பஸ்கட்டணம் ... பால் விலை... ஆர்ப்பாட்டம்...
கொடுமுடி புதிய பஸ்நிலையம் அருகே நேற்று மாலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பஸ்கட்டணம் மற்றும் பால் விலை உள்ளிட்டவற்றை தமிழக அரசு கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் உயர்த்தியது. இதனை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.
கொடுமுடி ஒன்றிய செயலாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்துகொண்டனர்.
வீடியோ பதிவு, போலிஸ்பாதுகாப்பு தர ,உயர்நீதி மன்றம் உத்தரவு.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)