ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ளது கந்தசாமிபாளையம்.
இந்த ஊரில் புகழ் பெற்ற சடையப்பசுவாமிகோயில் உள்ளது.
இந்தக்கோயிலில் வருடந்தோறும் தமிழ் வருடத்தின் முதல் மாதமாக
கருதப்படும் சித்திரைத்திருநாளின் முதல் நாளில் பொதுமக்களுக்கு
அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
கடந்த 32 ஆண்டாக தொடரும் இந்த நிகழ்ச்சி இன்று 33 ம் ஆண்டாக நடந்தது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் அன்னதான விழாவில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் சடையப்பசுவாமியின் பூஜையில் வைக்கப்பட்ட
எலுமிச்சை,
உப்பு, மசாலத்தூள் பாக்கெட்டுகள் ஏலத்தில் விடப்பட்டன. இதில் முதல்
எலுமிச்சம் பழம் ரூ 10 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. இந்தப்பழத்தை
உடுமலையைச்சேர்ந்த ஜோதிபிரகாஷ் என்பவர் ஏலத்தில் எடுத்துள்ளார்.