தொழிலாளி பலி
ஈரோடு மாவட்டம் கந்தசாமிபாளையத்தை அடுத்துள்ள கஸ்தூரிபா
கிராமம் தொட்டியங்கிணற்றுப்புதூரைச்சேர்ந்தவர் முருகன் (38). கூலி
தொழிலாளி. சம்பவத்தன்று தேங்காய்களை பையில்
போட்டுக்கொண்டு தனது மொபட்டில்
கந்தசாமிபாளையத்திலிருந்து வடபழனி ரோட்டில்
சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மொபெட்டின் முன்பக்கம்
மாட்டியிருந்த பை மொபட்டின் முன்சக்கரத்தில் சிக்கிக் கொண்டதில்
மொபெட் வாய்க்காலுக்குள் பாய்ந்தது.சம்பவத்தில் முருகனுக்கு தலையில்
பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் உள்ளோர் முருகனை மீட்டு கொடுமுடி
அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பினர்.
செல்லும் வழியில் முருகன் இறந்தார். சம்பவம் குறித்து அரச்சலூர் போலீஸ்
இன்ஸ்பெக்டர் சேகர் விசாரிக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக