அன்னாஹசாரே உண்ணாவிரதத்தில் விஜய்...
தமிழ் திரைப்பட நடிகர் விஜய் டெல்லியில் சமூக சேவகர் அன்னாஹசாரே நடத்திவரும்
உண்ணாவிரதப்போராட்டகளத்துக்கு சென்று அன்னாஹசாரேக்கு ஆதரவு தெரிவித்தார்.
உண்ணாவிரதத்தில் தனது இரசிகர்களுடன் கலந்துகொண்ட அவர் கூறியதாவது:
காந்திய வழியை உலக நாடுகள் பின்பற்றுகின்றன. அந்த விதத்தில் காந்திய வழியில்
உண்ணாவிரதம் இருக்கிறார் அன்னாஹசாரே.
நாட்டின் வளர்ச்சிக்கு ஊழல் பெரிய தடையாக உள்ளது.
ஊழல், மற்றும் லஞ்சம் ஒழிந்தால் வல்லரசாக இந்தியா மாறும். அதற்காக அன்னாஹசாரே போராடுகிறார்.
இது நல்ல போராட்டம். மக்கள் நலனுக்காக நடத்தப்படும் இந்தப்போராட்டத்தில்
பங்கேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக