வருகை தந்தமைக்கு நன்றி..

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

குற்றம் சாட்டப்பட்டவருக்கும் நீதிபதிக்கும் தொடர்பு?!.

                                                                         
                       குற்றம் சாட்டப்பட்டவருக்கும் நீதிபதிக்கும் தொடர்பு?!...

            வழக்கு விசாரணைக்கு தடை: சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி.

                           

  காஞ்சி சங்கரராமன் கொலை செய்யப்பட்ட வழக்கில்  கைது செய்யப்பட்ட

காஞ்சி ஜெயந்திர சரஸ்வதி சுவாமியின்வழக்கு விசாரணை புதுச்சேரி செஷன்ஸ்கோர்ட்டில்நடந்து வந்தது.

  இதன்  இறுதிவிசாரணை அடுத்த மாதம் 5 ம்தேதி நடபெறுவதாக இருந்தது.

 விசாரணை நீதி மன்றத்தின் நீதிபதியுடன் ஜெயந்திரேர்  பேசியுள்ளார். என்று கூறி சென்னையைச்சேர்ந்த வழக்குரைஞர் சுந்தரராஜன் செஷன்ஸ் கோர்ட்டின் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில்  தடை 
வழக்குரைஞர் சுந்தரராஜன்  மனு   தாக்கல் செய்தார்.    

 “ சங்கரராமன் கொலை வழக்கை விசாரித்து வரும் நீதிபதியுடன் குற்றம் சாட்டப்பட்ட ஜெயந்திரர் மற்றும்

அவரது  உதவியாளர் கௌரி மற்றும் இருவர் பேசியுள்ளனர். இவர்களது பேச்சை ஒரு தமிழ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

அதில் ஜெயந்திரர்  இன்னும் ஒரு வாரம் பத்துநாட்களில் மீதம் உள்ளவற்றையும் கொடுத்துவிடுகிறேன்.

அதுவரை பொறுமையாக இருங்கள் என கூறுகிறார்.

இதன் மூலம் குற்றம் சாட்டப்பட்ட ஜெயந்திரருக்கும் நீதிபதிக்கும் ஏதோ ஒரு உடன் பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

 எனவே சங்கரராமன் கொலை வழக்குக்கு   தடை விதிக்கவேண்டும் என        மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதனை ஏற்ற சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி சுகுணா , செஷன்ஸ் கோர்ட் வழக்குக்கு

 இடைக்கால தடை வழங்கியதுடன்  இது குறித்து விசாரணையை 8 வாரகாலத்துக்குள் மேற்கொண்டு   அறிக்கையை தாக்கல் செய்யுமாறு     சென்னை  உயர்நீதிமன்றத்தின் ஊழல் கண்காணிப்பு பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.


Download As PDF

கருத்துகள் இல்லை: