வருகை தந்தமைக்கு நன்றி..

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

சமச்சீர் கல்வி ... தமிழக அரசின் திட்டங்கள்





 
                              சமச்சீர் கல்வி ... தமிழக அரசின்  திட்டங்கள்

 உண்மையான சமச்சீர் கல்வி கிடைக்க  சில திட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வருவதாக

முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார்.

அவரது அறிவிப்பின் துளிகள்:-

  65 துவக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாகவும், 710 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும்

தரம் உயர்த்தப்படும்.

9735பட்டதாரி ஆசிரியர்கள், 3565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் இந்த ஆண்டில் நிரப்பப்படும்.

 பள்ளிகளில் தொழிற்கல்வி, உடற்கல்வி உள்ளிட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு, ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் 16549 பகுதி நேர ஆசிரியர் பணி இடங்கள்
நிரப்பப்படும்.

இதனால் 6,7,8 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர்.

  பள்ளிகளில் கழிப்பறைகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள் என சீரமைப்பு மேற்கொள்வதற்கு, ரூ.1082.71 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

நிலை உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் 3187 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

எல்லா மாணவ மாணவிகளுக்கும் பாடப்புத்தகங்கள் ஒரே மாதிரியாக அளிக்கப்படுவது போல் எல்லாருக்கும் ஒரே மாதிரியாக புத்தகப் பைகள்
கொடுக்கப்படவுள்ளன.

கணக்கு உபகரண(ஜியாமெண்ட்ரி பாக்ஸ்), வண்ண பென்சில்கள், புவியியல் வரைபடம் ஆகியவை வரும் கல்வியாண்டு முதல் வழங்கப்படும்.

 ஆசிரியர் அல்லாத பணியிடங்களாக, துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட 5000 பணியிடங்கள் புதிதாக நிரப்பப்படும் ,

ஒரே வருடத்தில் புத்தகத்தை மூன்று பருவங்களுக்கு மூன்று தொகுப்பாகப் பிரித்து முப்பருவ முறை கொண்டுவரப்படும் , இதன்மூலம் பள்ளிக் குழந்தைகள்
புத்தகச் சுமையைக் குறைக்க முடியும், எளிதாகக் கையாள இயலும்.

பத்து, பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி மதிப்பெண் பட்டியல் இனி மாணவர்களின் புகைப்படம் ஒட்டப்பட்டு,

தொழில்நுட்பம் சார் ரகசியக் குறியீடு இருக்கும் வகையில் வழங்கப்படவுள்ளது. மாணவர்களின் சிந்தனைத் திறனை

 ஊக்குவிக்க 7 முதல் 15 வயது வரையுள்ள மாணவர்களுக்கு செஸ் போட்டிகள் நடத்தப்படும்.

அரசு தொடக்க மற்றும் உயர்நிலை, நடுநிலை, மேல்நிலைப்பள்ளி வகுப்பு கற்றல் கற்பித்தலை

 மேம்படுத்த தகவல் தொழில்நுட்ப திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது பள்ளி ஆசிரியர்களுக்கான திட்டமாக செயல்படுத்தப்படும்.

இதன்மூலம் ஆசிரியர்களுக்கான தனிப் பயிற்சி திட்டம் உருவாக்கப்படும்.

அனைத்து மாணவர்களுக்கும் தரமான கணணி மூலமான நவீனக் கல்வி கிடைக்க செயற்கைக் கோள் மூலம்

 பாடங்களைப் பார்க்க வசதி ஏற்படுத்தப்படும்.

தமிழக ஆளுனராகிறார் ரோசையா...

  

                                                    
                                       தமிழக ஆளுனராகிறார் ரோசையா...

தமிழகத்துக்கு புதிய கவர்னரை நியமிப்பது குறித்து மத்திய அரசு முடிவு.

தற்போதைய தமிழக கவர்னர் பர்னாலாவின் பதவிக்காலம் சென்ற ஜீலை மாதத்துடன் முடிவடைந்தது.

இவருக்கு பதிலாக புதிய கவர்னரை நியமிக்கும் யோசனையில் இருந்த மத்திய அரசு ஆலோனையில்,

 ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ரோசையா தமிழகத்தின் புதிய கவர்னர் பதவிக்கு சிபாரிசு செய்யப்பட்டார்.

அதனை ஏற்ற மத்திய அரசு ரோசையாவை தமிழக கவர்னராக நியமிக்க முடிவு செய்துள்ளது.

ஆந்திர மாநில காங்கிரஸின் மூத்ததலைவரான ரோசையாவுக்கு 79 வயதாகிறது.கடந்த 79 ம் ஆண்டு முதல்

ஆந்திர சட்சபையில் ஐந்து காங்கிரஸ் முதல்வர்களின் தலைமையில் மந்திரியாக இருந்துள்ளார்.

கட்சியில் 50 ஆண்டுகளுக்கும் மேல் பணி ஆற்றியுள்ளார். ராஜசேகர ரெட்டியின் மந்திரி சபையில் இடம் பெற்றிருந்த

 இவர் ராஜசேகர ரெட்டியின் மறைவுக்கு பின்னர் ஆந்திர முதல்வர் ஆனால், தொடர்ந்து எழுந்த பல்வேறு சர்ச்சைகளால்

முதல்வர் பதவியை துறந்தார். கடந்த 98ம் ஆண்டில் எம்.பி ஆகவும் இருந்துள்ளார்.

 தற்போது எம்.எல்.ஏ,வாக இருந்து வரும் ரோசையா அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு

 தமிழக கவர்னராக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Download As PDF

கருத்துகள் இல்லை: