தமிழனை புறக்கணிக்கும் மீடியாக்கள்
இலங்கை பிரச்சனை விவாதத்தை ஒலிபரப்பவில்லை...
லோக்சபாவில் இன்று இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த விவாதத்தில் டி.ஆர்.பாலு பேசினார்.
போஸ்னியாவில் இனவெறிப் படுகொலைகளை நடத்திய அந்த நாட்டு ராணுவத் தளபதியை சர்வதேச கோர்ட் தண்டித்துள்ளது. அப்படி இருக்கையில்
அதேபோன்ற தண்டனையை ராஜபக்சேவுக்கு ஏன் தர முடியாது.
ஈழத்தில் நடந்த இறுதிக் கட்ட போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ
உதவிகளைக் கூட இலங்கை அரசு தரவில்லை. முகாம்களில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் அடைக்கப்பட்டனர். இன்னும் கூட அவர்களுக்கு விடிவு
பிறக்கவில்லை. இதை ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையே சொல்கிறது.
முகாம்களில் அடைக்கப்பட்ட தமிழர்கள் சொல்லொணா துயரத்திற்கும், சித்திரவதைக்கும் உள்ளானார்கள். பலர் படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள்
கற்பழிப்புக்குள்ளானார்கள்.
இலங்கையில் தமிழர்களைப் படுகொலை செய்த கொலைகாரன் ராஜபக்சேவுக்கு சர்வதேச கோர்ட்டில் கடும் தண்டனை வாங்கித் தர வேண்டும். தமிழர்கள்
பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண இலங்கையை இந்தியா கடுமையாக கேட்டு் கொள்ள வேண்டும்.
விவாதத்தை புறக்கணித்த மீடியாக்கள்:
நாடாளுமன்றத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த விவாதத்தை எடுத்தே ஆக வேண்டும் என்று அதிமுக, திமுக, இடதுசாரிகள் ராஜ்யசபாவில் நேற்றுகடும் அமளியில்இறங்கினர்.
இதனால் அவை ஒருமுறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் இன்றைக்கு விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இன்று
ராஜ்யசபாவிலும், லோக்சபாவிலும் விவாதம் நடந்தது.
டெல்லித்தெருக்களில் குரங்குகள் நடத்தும் குடும்பத்தை மணிக்கணக்கில் ஒலிப்பரப்பும் ஆங்கில மீடியாக்கள்
வாழ்க்கையை தொலைத்துவிட்டு.....வதை முகாம்களுக்குள் சிக்கி...உயிரை விட்டுக்கொண்டிருக்கும்
அப்பாவித்தமிழர்களுக்காக இந்தியாவின் ராஜ்ய சபாவிலும், லோக்சபாவிலும் நடந்த விவாதித்தின் ஒரு சிறு பகுதியைக்கூட ஒலிபரப்ப முன்வரவில்லை.
இலங்கை தமிழர்களுக்காக நடந்த இந்த விவாதத்தை எந்த ஒரு சேனலும் ஒலிபரப்பமுன்வராதது தமிழர்கள்மீது கொண்டிருக்கும் மனப்போக்கை காட்டுவதாய் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக