ஆங்கிலத்தில் பேச ஆசிரியர்கள் உதவவேண்டும்
அதிகாரி கோரிக்கை
ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஒன்றியத்தில் உள்ள 10 எழுத்து
தேர்வு மையங்களில் கற்கும் பாரதம் திட்டத்தின் கீழ் கற்போர்களுக்கான
அடிப்படை எழுத்துத்தேர்வு நடந்தது.
இதனை மாவட்ட கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர்
பொன்.குமார், மாவட்ட கற்கும் பாரதம் திட்டத்தின்
மாவட்ட கல்வி அதிகாரி முனுசாமி பார்வையிட்டனர்.
பின்னர் கூடுதல் முதன்மைக்கல்வி அதிகாரி
பொன்.குமார் பேசும் போது கூறியதாவது:
மாணவர்கள் ஆங்கில மரபுத்தொடர்கள் மற்றும் புதிய சொற்களை
பயன்படுத்தி சொல்லாதிக்க திறனை மேம்படுத்தவும், தடையின்றி
ஆங்கிலத்தில் பேசும் திறனை வளக்கவும் ஆங்கில நாளிதழ்கள் மற்றும்
மற்றும் புத்தகங்களை கற்கும் ஆர்வத்தினை தொடக்க நிலை ஆசிரியர்கள்
ஏற்படுத்திடவேண்டும் என கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக