வருகை தந்தமைக்கு நன்றி..

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

உதவிய அரசு பள்ளி

                                 

                                                        


                                 ஏழை மாணவனின்  பொறியியல்  கல்விக்கு 
                                                         உதவிய அரசு பள்ளி

                  ஈரோடு மாவட்டம்  சிவகிரியில் உள்ளது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் சென்ற கல்வியாண்டில்

  பனிரண்டாம் வகுப்பில் படித்த   மாணவர் வெற்றிவேல்.
 
 இவர் சென்ற ஆண்டு நடந்த பொதுத்தேர்வில் மாநில மொழியில் படித்து ஆயிரத்து 36 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.

            மேற்கொண்டு பொறியியல் கல்வி கற்க விரும்பிய மாணவர் வெற்றிவேலுக்கு அவரது குடும்ப வருமானம் தடையாக இருந்தது.

 இருந்தபோதிலும் தனது  மகன் வெற்றிவேலின் கல்வி ஆர்வத்தை பூர்த்தி செய்ய நினைத்த அவரது பெற்றோர் தனது மகனின்

 மேற்கல்விக்கு கல்வி கட்டணம் செலுத்துவதற்கு நிதி உதவி கோரினர்.
                      
            அவர்களது கோரிக்கையை ஏற்ற பள்ளிநிர்வாகம் மாணவனுக்கு உதவ முன் வந்தது.

        பள்ளியில் நடந்த விழா ஒன்றில் மாணவர் வெற்றிவேலுக்கு  ரூ 11 ஆயிரத்து 50ஐ கல்வி கட்டணமாக தந்தது.

                                                                                  ----

                                  



                                 
Download As PDF

கருத்துகள் இல்லை: