அன்னாஹசாரே போராட்டத்துக்கு காங்கிரஸ்
எம்.பிக்கள் ஆதரவு
வலிமையான லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கோரி தில்லியில் உள்ள ராம்லீலா மைத்தானத்தில்
உண்ணாவிரதம் இருந்துவரும் சமூகசேவகர் அன்னாஹசாரேவின் போராட்டத்துக்கு இரு காங்கிரஸ் எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நேற்று மும்பை பாந்த்ராவில் உள்ள காங்கிரஸ் எம்.பி பிரியாத்தின் வீட்டிற்கு அன்னாஹசாரேவின் ஆதரவாளர்கள் சென்றனர்.
அவர்களிடம் பேசிய எம்.பி பிரியாதத் வலிமையான மசோதவாக லோக்பால் மசோதா இருக்கவேண்டும் என்பதை விரும்புகிறேன்.
நீதித்துறையும், பிரதமரும் இந்த மசோதாவின் வரம்புக்குள் வரவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து எதுவும் எனக்கில்லை என்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதே போல மற்றொரு காங்கிரஸ் எம்.பியான சஞ்சய் நிருபம் அன்னாஹசாரேவின் போராட்டத்தை ஆதரிப்பதாக கருத்து தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக