ஆதரவு தெரிவித்து
புறக்கணிப்பு
லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து
வரும் சமூக சேவகர் அன்னாஹாசாரேவை ஆதரித்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர்
உண்ணாவிரதம் இருந்தும் , ஆர்ப்பாட்டம் நடத்தியும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
நேற்று ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தைச்சேர்ந்த வழக்குரைஞர்கள் சங்கத்தினர்
அன்னாஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் மற்றும் நீதி மன்ற புறக்கணிப்பு செய்தனர்.
சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் நடந்த இந்த புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக