குரங்குகள் தொல்லை...
ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் ஏமகண்டனூர் மற்றும்
சுல்தான்பேட்டை
பகுதியைச்சேர்ந்த மக்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை
தீர்க்கும் பிரிவில் கொடுத்துள்ள மனு:
கொடுமுடியில் உள்ள 3,மற்றும் 4வது வார்டுகளில் வசித்துவருகிறோம்.
எங்கள் பகுதியில் குரங்குகள் அதிகமாக உள்ளன.
இவை உணவுதேடி அருகில்உள்ள வீடுகளுக்குள்புகுந்து பொருட்களை
எடுத்துச்செல்வதுடன், மக்களை தாக்கவும் செய்கின்றன. பள்ளி மாணவிகள்
கொண்டு செல்லும்உணவுப்பைகளை பிடுங்கிச்செல்கின்றன. இதனால்
சிறுவயதுகுழந்தைகள் வெளியில் நடமாட முடிவதில்லை. வாகனங்களில்
செல்வோரும் விபத்துகளுக்கு உள்ளாகின்றனர்.
அதிகரித்துவரும் குரங்களின் அட்டகாசங்களை தவிர்க்க அவற்றை
பிடித்து வனபகுதியில் கொண்டு சென்றுவிடவேண்டும் என மனுவில்
குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக