அன்னாஹசாரேவுக்கு ஆதரவாக தீக்குளிப்பு
லோக்பால் மசோதாவை அமல்படுத்தக்கோரி சமூக சேவகர் அன்னாஹசாரே
டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடத்திவரும் 10 நாட்களை தொட்ட
நிலையில்...
அவரது ஆதரவாளர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
டெல்லி ராஜ்காட்டில் உடல் முழுவதும் தீக்காயம் பட்ட நிலையில்
வாலிபர் ஒருவர்கிடந்துள்ளார். அவரை மீட்ட மக்கள் மருத்துவமனையில்
சேர்த்தனர்.சிகிச்சை பயனின்றி அவர் இறந்தார்.
முன்னதாக அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் தினேஷ்குமார்
யாதவ்என்பதும் பீகாரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
நாடு முழுவதும் அன்னாஹசாரேவின் அனல் வீசிக்கொண்டிருக்கும்
நிலையில் தமிழகத்தில்தற்போது பிரளயமே நடப்பதுபோல் காட்சிகள்
அரங்கேறி வருகின்றன. ஒன்று அன்னாஹசாரேவுக்கானஆதரவுப்போராட்டம்,
மற்றொன்று ராஜிவ்கொலை வழக்கில் தூக்கு தண்டணைநிறைவேற்றத்துக்காக
தயாராகிவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுவிக்ககோரி
நடந்துவரும் போராட்டம்.
நேற்று இவர்களுக்காக சென்னையை சேர்ந்த வழக்கறிஞர்கள் போராட்டம்
நடத்தினர்.
சட்டக்கல்லூரிமாணவர்கள் ரயில் பாதையில் தலை வைத்து போராட்டம்
நடத்தினர்.
அடுத்து வேலூர் மாவட்டம்
ஜோலார்பேட்டையில் நூற்றுக்கணக்கான மக்கள் சேர்ந்து உண்ணாவிரதம்
இருந்தனர்.
தூக்கு தண்டணை விதிக்கப்பட்டவர்களின் விஷயத்தில் தமிழக முதல்வர்
என்ன செய்யப்போகிறார்? என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் தமிழகம்
மட்டும் அல்லாது உலக நாடுகளும் உள்ளன.
மகன் உயிர் விடும் முன்பே மாய்வோம்...
தந்தை குமுறல்....
எனது மகன் உயிர்விடும் முன்பே வேலூர் சிறை முன்பு தற்கொலை செய்துகொள்வோம்
என்று தூக்கு தண்டணை விதிக்கப்பட்ட பேரறிவாளனின் தந்தை பேசினார்.
ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட மூவரையும் தூக்கிலிடக்கூடாது என வலியுறுத்தி
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில்
பெருந்திரளானோர் உண்ணாவிரதம் இருந்தனர்.
அந்த உண்ணாவிரதத்தில் தண்டணை விதிக்கப்பட்ட பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது: எனது மகன்
பேரறிவாளன் உயிர் விடுவதற்கு முன்பே வேலூர் சிறை வாசலில் நாங்கள் குடும்பத்துடன் உயிரை விடுவோம்.
எனது மகனின் உயிரை தமிழக முதல்வர் ஜெயலலிதா காப்பாற்றவேண்டும்.
செய்யாத குற்றத்துக்காக எனது மகன் 21 ஆண்டுகள் சிறையில் இருக்கிறான். அப்பாவியான
அவன் உயிரை பறிக்க நினைக்கிறார்கள். அவனது உயிர் போகும் முன்பே நாங்கள் குடும்பத்துடன் உயிரை விடுவோம் என்றார்.
இதற்கிடையே வேலூர் சிறையில் தமிழக காவல்துறையின் சிறப்பு போலிசார் கொண்ட படை
குவிக்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகளின் உன்னிப்பான பார்வையில் தற்போது வேலூர் சிறைச்சாலை உள்ளது.
பேரறிவாளன், சாந்தன், முருகனுக்காக
ராம்ஜெத்மலானி.
ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டணை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன்
ஆகியோருக்கு அடுத்த மாதம் தூக்கு உறுதி என்ற நிலையில் அவர்களுக்கு ஆதரவாக வழக்காட வருகிறார்
பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி. வருகிற திங்கள் கிழமை ஆகஸ்ட் 29 ம்தேதி சென்னை <<உயர்நீதி
மன்றத்தில் தண்டணையை நிறுத்தி வைக்ககோரி தண்டணை விதிக்கப்பட்டவர்களின் சார்பில் வாதிட
உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக