வருகை தந்தமைக்கு நன்றி..

புதன், 24 ஆகஸ்ட், 2011

சமரச தீர்வு

                                                              




  
                                                                         சமரச தீர்வு

 ஈரோடு மாவட்டம்  கொடுமுடியில்  கொடுமுடி வட்ட சட்டப்பணிகள்

 குழுவின் மக்கள் நீதி மன்ற அமர்வு நடந்தது.

 மாவட்ட உரிமையில் நீதித்துறை நடுவர் பாபுலால் தலைமை வகித்தார்.

 ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பழனிசிவகுருநாதன், அமர்வு வழக்குரைஞர்

]ராமசாமி ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.

 அமர்வில் பி.எஸ். என்.எல்  சார்பில் அதன் அதிகாரிகள் ஜம்புலிங்கம்,

 சண்முகசுந்தரம்,பாலசுப்பிரமணியம்,முருகேசன், கமலா ஆகியோரும்

பி.எஸ்.என்.எல்  வாடிக்கையாளர்களும் ஆஜராகினர்.

      நீண்டகாலமாக பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு

வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலாகாத தொகை ரூ40 ஆயிரத்து 430

அமர்வில் வசூல் செய்யப்பட்டு 41 மனுக்கள் சமரசம் செய்து வைக்கப்பட்டது.


Download As PDF

கருத்துகள் இல்லை: